சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Monday, 10 December 2012

தர்மபுரி கலவரம்

தர்மபுரி கலவரம் 

ஆதி  மனிதன் தன் 
சகோதரனை அழிக்க 
உருவாக்கினான் "சதி"- அதன் 
பரிணாம வளர்ச்சியே நமக்கு 
பரிமாறப்படும் இந்த "சாதி"

"எல்லோரும் ஒரு தாய் மக்கள்"எனும் 
பாலப்பாடம்  பயின்ற "நீயா"?
சகோதர இரக்கத்தை 
எரிக்கும் "தீயா"க...!

"கலப்பு திருமணம்" என்பதன் பொருள்:
"கரைப்பு - இரு இனம்" அல்லவா ?

காதல் என்றால் உயர்சாதி 
பார்க்கும் "மானிடா"?-உங்கள் 
காமத்திற்கு மட்டும் 
கீழ்சாதி "தீனியா"

எந்த சாமி இட்டது கட்டளை-நீயே 
இச்சாதியை காக்கும் தலைவனென்று ....
ஆதி மனித சாதியே அழிந்த பின்பு -இடையில் 
வந்தேறிய எந்த சாதியும் ஒருநாள் அழிவதுண்டு ...!

சாதி வெறி பிடித்தாடும் தமிழர்காள் - உம் 
சாதி பெயர் தோற்றுவித்தவர் யாரோ ?-அதை 
பயிற்றுவித்தவர் தான் யாரோ ?

எத்தனை பாரதியும்,பெரியாரும் 
வந்து  என்ன பயனோ ?
திருந்தா உங்கள் புத்தியை தான் 
என்ன செய்வது ?என்று 
தமிழுக்கும் தெரியவில்லை!
தமிழருக்கும் புரியவில்லை!





No comments:

Post a Comment