சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Thursday, 30 December 2010

பேனா ....



பேனா ....

விரல்களின் காதலன்..
மொழிகளின் காவலன்../

மொழியின் தேடல்கள்..
பேனாவின் உடல்கள்../

பேனாவே..
உன்னை கண்டதன் முகவரி..
மொழி கொண்டது முதல்வரி../


தலைமுறை பல கண்ட 
தலைமகன் - நீ 
தரம் தாழ்ந்திடா 
விலைமகன் :

உனக்கு தான் 
எத்தனை காதலிகள் :
எல்லையும், கணக்கும் 
அற்ற மொழிகள் :

நாகரீகமோ வளர்ச்சி 
பரிமாணம் - உன்னுருவம் 
நாளொருமேனியும் 
கவர்ச்சி உருமாறும்../

மரணம், ஜனனம்
எனுமிரண்டு ...
மாறி மாறி உனக்கு 
வருவதுண்டு ../

உடற்தோலை கழற்றி 
எறிவது பாம்பின் சிறப்பு :
உயிர் நீரை ஊற்றி 
பெறுவது உன் பண்பின் சிறப்பு :

கரங்களுக்குள் அடங்கும் 
ஆயுதம் - நீ
கர்ஜித்தால் ஆட்சியில் 
ஏறும் காகிதம் :

உன் எழுத்துகள் 
ஒருபுறம் நீரோட்டம் ;
புறக்கணித்தால்
உருவாகும் போராட்டம் :

இரத்த தானம் செய்வின்
உயிர் பெறும் உடலெங்கும் - நீ 
இங்க் தானம் செய்வதாலோ 
உயிர் பெறுது உலகெங்கும்../

உன்னை கவனிக்க 
மறந்தவன் அறிவு குருடன் :
கவனித்து மறைத்தவன் 
அசூர திருடன்: 

Monday, 6 December 2010

வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை




வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை 



அறிவும் மனமும்
இணைத்திருக்கும் கயிறு ...
அறுந்து விடுகையில் 
ஆரம்பமாகிறது தவறு .../

பொய்களை கொண்டு - நம் 
வார்த்தைகளை உடுத்தி கொள்ளும் :
நோய்களை கொண்டு - நம் 
வாழ்க்கையை உறுத்தி கொல்லும்:

அவசரங்கள் ஏற்றும் போதையில் 
தவறுகள் நிறைந்தாடும் ...
அதிக தவறுகள் அடிக்கடி நிகழ்வது 
கவன குறைவாகும் ..../

கோபம் வெளிப்படுத்தும் உணர்ச்சியில் 
தவறுகள் சிதறி விழும் :- மனதில் 
காயம் ஏற்படுத்தும் மகிழ்ச்சியில் 
தவறுகள் சிரித்து எழும் :

சந்தர்ப்பங்கள் தவறுகளை 
செய்ய சொல்லும் :
நிர்ப்பந்தங்கள் தவறுக்குள் 
நிற்க செய்யும் :

தவறுகளில் தடுக்கி விழும் மனம்: - வாழ்வை 
தடுமாற்றத்துடனே நடத்த இயலும் தினம் :
மலரை விட மென்மையானது மனம் :- அதை 
மலையை போல் கடினமாக்குவது தவறின் குணம் :

நிலையில்லாதது வாழ்வு - இவ் 
வுலகம் நமக்கு சொல்வது : -இதில் 
நிலைப்பதற்கா தவறினை 
நாம் செய்வது ?

தவறுகள் சொல்லி தரும் வகுப்பினை - கேட்டு 
வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை ...


Friday, 12 November 2010

மலர் பரிசு


 


மலர் பரிசு 



கடலோரமாய் ..
கவிதையொன்றை 
எழுதி வைத்து 
சென்று விட்டேன் ../

மறு நாள் ஆகியும் 
மறையாமல் - அங்கு 
'மலரோடு நின்றது' 
மண் மேல் கவிதை ../

கவிதைக்கு அருகே மலர் :

கவிதையை கண்டும் 
காணாமல் பலர் :

காலால் மிதித்து 
நசுக்கியவர்கள் சிலர் :

வாடிய அம்மலர் 
எங்கிருந்து வந்ததோ ?

தேடி தேடி பார்த்தேன் 
மலரின் காலடி தடத்தை .../

மணல் கண்ணாடியில்- மலர்
காலடி  தடம் தெரியவில்லை /

அலையில் ஒதுங்கிய நுரை மலரோ ?- இல்லை கற் 
சிலையில் அணிந்த மாலை மலரோ ?

வந்ததன் ரகசியம் புரியாமல்- ஒரு 
கையிலெடுத்தேன் மலரை ..

மறு கையால் துடைத்தேன்
அழுது புலம்பிய மனதை ../

பரிசு பொருளாய் வந்ததென 
மனதுக்கருகே சொருகி சென்றேன் :

கவிதை போட்டியில் வெற்றி பெறா
கவிதையை மலரால் வென்றேன் :

Monday, 8 November 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்




அழிவின் அடையாளங்கள் 


எண்ணற்ற உயிரினத்தை 
தத்தெடுத்த இவ்வுலகம்.. 
என்றோ ஓர் நாள் 
உயிரற்று போய்அழியும் ../  


அழிவின் அடையாளங்களை 
அழகாய் எடுத்து கூறவே- இது  
ஆன்மிகம் கூறும் அறிவியல்   
ஏற்று கொள் அறிவே..../ 


பெற்றெடுத்து வளர்த்த மகன் - தன்னை
பேணாத அடிமை நிலை  
ஒரு தாய் அடைவாள் : 
முத்தம் ஈந்து மகிழ்ந்த மகள் - தனக்கு  
முதலாளியாய் மாறும்
நிலைகண்டு உள்ளம் உடைவாள் : 


கண்காட்சி பொருளாய் - பெண் 
காண்போரை கவரவே சிரிப்பாள்:
 உடையணிந்தும் கூட - தன்னின்  
உடழகை நிர்வாணமாய் விரிப்பாள்:


போதையூட்டும் அறிவில்
மாறி போகும் 
மனிதனின் வாழ்க்கை முறை :- அந்நிய 
 பேதை மீது பித்தம் கொண்டு 
அவர்கள் வாழ்வில் படியும் 
அழுக்கு கறை.. / 

தகுதியற்றவர் தலைமை
பொறுப்பில் அலைவர் :
தன்னலம் பேணியே 
பொதுநலம் அமைப்பர் :
 நாணயம் இல்லா 
காட்சியமைப்பு நடக்கும் -அந்நாளில் 
 நாணயத்திற்க்காகவே 
ஆட்சியமைப்பு இருக்கும் ../

கொடுக்கும் தர்மத்தை 
பொறுக்கும் நிலை அன்றிருக்காது :
செல்வங்கள் சேர்த்திருந்தும்-அவர்கள் 
செயல்களோ  வென்று இருக்காது :

ஆண்டுகள் சுருட்டப்பட்டு 
வாரங்களாக சுழற்றப்படும் :
மாதங்கள் உரிக்கப்பட்டு 
மணித்துளிகளாக விரிக்கப்படும் :
காலங்கள் கல்லறை நிமிடங்களை 
எதிர்நோக்கியே பயணிக்கும் :
கண்களின் கனவுகள் 
கண்ணீரில் மூழ்கியே மரணிக்கும் :

பூகம்பங்கள் மூன்று - இப்
பூமியை குலுக்கும் :
மேற்கு,கிழக்கு,மத்தியென-அரேபிய 
தேசத்தையே உலுக்கும் : 
உயர்ந்த கட்டிடங்கள் 
உருக்குலைந்து இடிந்து போகும் :
 உயிரினங்கள்
உயிரற்று அழிந்து போகும் :

சரித்திரம் அந்நாளில்  -தன்
நிஜத்தினை இழக்கும் :
விசித்திர விலங்கொன்று 
பேசிக்கொண்டும் இருக்கும் :

அதிசயங்கள் படைப்பினத்தை 
நிலைப்படுத்தும் -நிகழும் 
அற்புதங்கள் படைத்தவனை
நினைவுப்படுத்தும் :

எண்ணிலடங்கா குள்ளர்கள் 
கூட்டமிரண்டு  - இம் 
 மண்ணகத்தை மூடும்
படையெடுத்து நின்று ../  
நொடியில் பெருகும் 
அதன் இனப்பெருக்கத்தால் 
 மக்கள் மரண பயம் 
அடைவர்  மனநடுக்கத்தால்.../

ஆக்சிஜன் விகிதம் 
அடங்கி  போகும் அந்நேரம் ..
ஆக்டோபஸ் புகையால்
நின்று போகும் உயிர் சுவாசம் ..../ 


தன்னை இறைவன் என்பான் ..
தஜ்ஜால் என்னும் ஒருவன்../
ஒரு கண் அவனுக்கு ஊனமாகும் :-அவனால்
ஒருமுறை மரணம் கூட குணமாகும் :
 பிரமிப்புகள் அதிகம் நிகழ்த்தி
தன்னை பிரபலப்படுத்துவான் :- அவன் தன்
பேராற்றலால் இறைவனாக 
தன்னை பிரகனப்படுத்துவான் :

பூமி ஓர் நாள் 
தன் சுழற்சியை மாற்றும் :
பூகம்ப நிகழ்வினை 
தன் உடம்பினில் ஏற்றும் :
கிழக்கு சூரியனை 
மேற்கில் காட்டும் - இறை  
 மன்னிப்பென்னும் வாசல் 
அன்று தான் பூட்டும் : 

 மாபெரும் நெருப்பொன்று
திரண்டு வரும் ..
மக்களை ஓரிடத்திலே 
கொண்டு வரும் ../
ஏமன் நாட்டில் கூட்டப்படும் 
அந்த மக்கள் திரள் :- அந்நாளில்   
 ஏற்காது அவனுக்கும் 
கேட்காது மன்னிப்பின் குரல் :




Monday, 25 October 2010

கைப்பேசியை கைப்பிடித்தவன் கவனிக்கவே

விஞ்ஞான அதிசயம் - உனை
விவரிக்க வேண்டியது அவசியம்.
காலங்கள் செரித்து போடப்பட்ட கடிதங்கள் - இன்று 
காலங்கள் சேமித்து மீட்டப்பட்ட நிமிடங்கள் :
விஞ்ஞானத்தின் கருவறையிலிருந்த உனக்கு 
விலாசம் தந்தவன் யாரோ ?
விபரமறியாதவர் அறியட்டும் 
மார்ட்டின் ஹூப்பர் தான் அந்த ஹீரோ "
உயிரற்ற உன்னால் உணர்வுட்டு 
உயிர்பெற்றோர் உண்டு /
கைரேகை சாலையில் 
பயணிக்கும் கைபேசி - உனை 
கைப்பிடித்தவன் 
பெறுவானோ? கைராசி ../
நீ ..
இன்ப செய்தி தருகையில் 
உள்ளமோ மகிழ்கிறது ..
இழப்பு செய்தி தருகையில் - கண்ணில் 
வெள்ளமாய் திகழ்கிறது ../
ஒலியால் உயிரை இழுக்கும் - இருவர் 
ஓசையே உறவை இணைக்கும் ../
இரு இதழ்கள் கொடுத்துகொள்ளும் இனிப்பை..
இருதயங்கள் பெறுகிறது அந்த இணைப்பை.../
தொலைவுகள் தொடும் இடமாகும் - உன்னால் 
தொல்லைகள் கூட வரமாகும் .
கண்ணீர் பேசும் வார்த்தை - உன்னால் 
கவிதை பேசும் :
முன்னாளில் கேட்போர் 
"எங்கடா போற கைவீசி ?"- அந்த 
முன்னோர் இன்றிருந்தா அவர்கள் 
கையிலும் இருக்கும் கைபேசி ../
மழலைகள் தொடுகையில்
மணம்  வீசும் - அம்
மவுனங்கள் உன்னால் 
தமிழ் பேசும் :
துயரங்கள் உண்டென்று - நீ 
தூங்குபவரை எழுப்புவதுண்டு :
வெற்றிகள் கிடைத்ததென்று - நீ 
வாழ்த்தும் பெறுவதுண்டு :
கன்னி பெண்ணின் கட்டிலிலே 
உனக்கென தனி இடமுண்டு ..
காதல் பேசும் காம பேச்சில் 
உன் கற்பும் கலைவதுண்டு ../
துள்ளி திரியும் மாணவ கூட்டம் 
நீயிருக்கும் சபை நோக்கியே ஓட்டம் :
பாடி வரும் உன்னை - சிலசமயம் 
திட்டிவிட தோன்றும் ..
தேடி வரும் உனக்காய் - மனம் 
பரிதாபமும் காட்டும் ../
உன் சிணுங்கல் கேட்டு 
அமைதியும் ஆர்ப்பரிப்பாகும் :
உடன் இருப்பவர் முகமோ 
உடனே எரிச்சலாகும் :
உன் கவர்ச்சி தன்மையால் 
காதல் கொண்டோரும் உண்டு :
கதிரியக்க தன்மையால்
காது இழந்தோரும் உண்டு :
ஆசையாய் படம் பிடித்து 
வியாபாரத்தை நிரப்புவாய் :
ஆபாசமாய் படம் எடுத்து 
விபச்சாரத்தை பரப்புவாய் :
பொருந்தா காதலையும் 
பொருத்தம் பார்த்து 
சேர்த்து வைப்பாய் :
அண்டை வீட்டு 
கணவன்,மனைவி
கள்ள காதலை 
ஏற்றி வைப்பாய் :
பாலுணர்வு தூண்டும் படங்களால் 
பாலியல் கொடுமை நடத்தி வைப்பாய் :
பாலியல் படங்களை - மாணவ 
பாடங்களாக அனுப்பி வைப்பாய் :
விரச வாசகங்கள் உன்னால் 
விடலைகளுக்கு வசியமானது - 
விச வாசகங்கள் இவர்களுக்கு 
போதிக்கப்படும் விஷயமானது :
பணம் படைத்தவன் 
மனம் கெடுக்க 
படையெடுக்கும் மிரட்டல்கள் - அக் 
கயவர் கூட்டம் கண்டறிய பயன்பட்டால் 
உனக்கோ கிடைக்கும் கைத்தட்டல்கள் :
கைப்பேசியே - உன்னை 
கைப்பிடித்தவன் கவனிக்கவே இது ..

Thursday, 21 October 2010

நண்பா உனக்காக

நீ..
வாலிபம்
உடுத்திய
பரிமாணம் - உன்
வாழ்வோ
வற்றா
வருமானம் :
நீ..
பெருமைகள்
சுமக்கும்
புகழோவியம் - உன்
பெருமைகள்
இல்லாமல்
இயங்காது காவியம் :
கன்னி பேச்சோ
கத்தி வீசும்
ஆயுதம் - உன்னை
களவாடி சுத்தி திரியும்
இந்த காகிதம் :
வங்க கடல்
அலை போல்
உன் சிரிப்பு /
சிங்க நடை அழகோ
தனி சிறப்பு /
எதையோ தேடிடும்
உலகில் ...
எதுவும் நாடிடும் - உன்
அழகில் ../
இழப்புகளோ உன்னிடம்
இருப்பதை பெற்று செல்லும் ..
இன்பங்களோ உன்
இதயத்தை தொட்டு சொல்லும் ../
உன் உழைப்பின்
வெளிச்சம் கொண்டு
நிலாக்கள் ஒளி பெறும்   ..
நீ..
உடுத்தும் 
புத்தாடைக்காக - இங்கு
விழாக்கள் நடைபெறும்../
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லையென - உனை
இழக்கிறாய் :
திறமை என்பது
எதுவென புரியாமல் -உன்னை
தொலைக்கிறாய்../
அறிவின் செயல் வடிவம்
திறமையாகும் ...
அறிவின் செயலே
இல்லா உருவம்
வறுமையாகும் ../
மூளை கொண்டு
சிந்திக்கும் போது
அறிவு பிறக்கும் ..
முளைக்கும் பிரச்சனையை
சந்திக்கும் போது தான்
அறிவே ஜொலிக்கும் ../
உன் வருகையை
எதிர்பார்த்து - இவ்வுலகின்
வாசல் திறக்கிறது..
உன் ஜன்னலை
எட்டிபார்த்தே  - வாய்ப்புகள்
நிற்கிறது../
உன்..
உள்ளத்தில் விழுந்த அடிகள்..
உன்னை
உயரத்தில் ஏற்றும் ஏணிபடிகள்../
இன்றே முயற்சி செய் :
இவ்வுலகை ஆட்சி செய் :
முன்னேற்றமோ - உன்
வரவேற்ப்பறையில்.....
முன்னேற துடிக்கும் - நாங்களோ
உன் வகுப்பறையில்../
                          

Friday, 24 September 2010

கனவுகளின் சொர்க்கம் கல்லறையா ?


புது வாழ்வை தேடி 
ஒரு பயணம் ..
அவ்வாழ்வை சேரும் 
முன்னே கிட்டுமோ ?
மரணம் ../
மனித வாழ்க்கை - இங்கோ 
நரக வாழ்க்கை :
வீட்டிலே நாடோடியாய் திரிந்தவன் - இந்த 
நாட்டிலே அடிமையாய் எரிகிறான் :
நிம்மதியை தேடுகிறது அவனது இரவுகள் ...
நிம்மதியாய் உறங்குகிறது அவன் உறவுகள் :
கனவுகளின் சொர்க்கம் கல்லறையா? - இங்கே 
கடன்பட்ட அடிமைக்கு வெறும் சில்லறையா ?
அழகாய் பிறந்தவன் - இங்கு 
அழுக்காய் இருக்கிறான் :
உப்பை பிரித்தவன் - இங்கு 
குப்பை பொறுக்குகிறான் :
அடிமையாய் வாழ - தன்னை  
அடமானம் வைத்தானோ ?
அயல்நாட்டு மோகத்தில் - தனக்குள் 
அவமானம் தைத்தனோ ?
உயிர் பிழைக்க கலை செய்யும் 
நம் நாடு - இதுவோ 
உயிரோடு கொலை செய்யும் 
சுடுகாடு :
பசியென்று இருந்ததில்லை அங்கு..
பசித்திருந்தும் புசித்ததில்லை இங்கு ../'
கண்ணீரை துடைக்க 
கன்னங்களுக்கு தெரியாது -
கைகள் துடைக்கும் வரை ...
கடன்பட்ட கண்களுக்கு  
கனவுகள் நிறையாது -
கையில் காசு சேரும் வரை ../

Thursday, 23 September 2010

பனி மலை பிரதேசமா ?

பீரங்கி, துப்பாக்கிகளுக்கு
முன்னால் மன்றாடும்
கண்ணீர் துளிகள் :
தார் பூசப்பட்ட ரோடெல்லாம்
ரத்தம் போர்த்தப்பட்ட வழிகள் :
"தேவை சுதந்திரம் 
எமக்கு நிரந்திரம் " - இது
காஷ்மீரிகளின் இதய துடிப்பின் வாசகம் :
ஆக்கிரமிப்பு இந்தியாவிடம்
கேட்கிறார்கள் யாசகம் :- இது
ஒரு தலை ராகம் அல்ல ...
விடுதலை வேகம் ../
660 தீவிரவாதிகளுக்கு
6 லட்சம் சிப்பாய்கள்
காஷ்மீரின் இன்றைய நிலைமை :
இது தான் பாதுகாப்பு எனும்
பேரில் நிகழ்த்தப்படும் கொடுமை :
தீரா நாதமாய் ஒலிக்கும்
சுதந்திர வேட்கைக்கு ...
தீவிர வாத சாயம்
பூசப்படுவதென்னவோ?
விடுதலை எழுப்பும்
உணர்வுகளை நோக்கி
குண்டு மழை
வீசப்படுவதென்னவோ?
நிறைவேற்றுவோம்
ஐ .நா.வின் ஒப்பந்தத்தை ....
ஒளியேற்றுவோம் - அவர்கள்
வாழ்வின் தீப்பந்தத்தை .../
நாளையே நடக்கட்டும்
பாரப்பட்சமில்லா ஓட்டெடுப்பு :
நாமும்  சேர்ந்து நடத்துவோம்
அவர்களுக்கு வரவேற்ப்பு :
இந்தியாவின் சமாதான புறா
இப்பனி மலையில் பறக்கட்டும் ...
ரசாயனம் கலவா காற்றை
இனி பிறக்கும் குழந்தையாவது சுவாசிக்கட்டும்