கோடையில் அனல் காற்று - இங்கோ
வாடையில் மணல் காற்று :
புழுதி படர்ந்தாடும் சாலைகள் :
பூக்களே மலராத இப்பாலைகள் :
பசுமையே இல்லாத பூந்தோட்டம் - இங்கே
பசியோடு குளிரும் நம்மை வாட்டும் :
வாட்டும் குளிரில் வளருது நம் வறுமைகள் - அது
காட்டும் வழியினில் வதங்குது நம் திறமைகள் :
தூக்கம் தழுவும் நம் கண்கள் -அதில்
தூசியை நிரப்புதே இம்மண்கள் :
தாக்கும் புயலில் நம் உடம்பு :-அதை
தாக்கி அழிக்குது நம் உழைப்பு :
அமைதியில்லாமல் கழிந்தது இன்றைய இரவு :
அதோடு சேர்ந்து கரையுது இன்றைக்கு நிலவு :

No comments:
Post a Comment