சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Saturday, 10 January 2015

இன்றைய இரவு...! இன்றைக்கு நிலவு...!


கோடையில் அனல் காற்று - இங்கோ 
வாடையில் மணல் காற்று :

புழுதி படர்ந்தாடும் சாலைகள் :
பூக்களே மலராத இப்பாலைகள் :

பசுமையே இல்லாத பூந்தோட்டம் - இங்கே 
பசியோடு குளிரும் நம்மை வாட்டும் :

வாட்டும் குளிரில் வளருது நம் வறுமைகள் - அது 
காட்டும் வழியினில் வதங்குது நம் திறமைகள் :

தூக்கம் தழுவும் நம் கண்கள் -அதில் 
தூசியை நிரப்புதே இம்மண்கள் :

தாக்கும் புயலில் நம் உடம்பு :-அதை 
தாக்கி அழிக்குது நம் உழைப்பு :

அமைதியில்லாமல் கழிந்தது இன்றைய இரவு :
அதோடு சேர்ந்து கரையுது இன்றைக்கு  நிலவு :


No comments:

Post a Comment