சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Monday, 6 December 2010

வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை




வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை 



அறிவும் மனமும்
இணைத்திருக்கும் கயிறு ...
அறுந்து விடுகையில் 
ஆரம்பமாகிறது தவறு .../

பொய்களை கொண்டு - நம் 
வார்த்தைகளை உடுத்தி கொள்ளும் :
நோய்களை கொண்டு - நம் 
வாழ்க்கையை உறுத்தி கொல்லும்:

அவசரங்கள் ஏற்றும் போதையில் 
தவறுகள் நிறைந்தாடும் ...
அதிக தவறுகள் அடிக்கடி நிகழ்வது 
கவன குறைவாகும் ..../

கோபம் வெளிப்படுத்தும் உணர்ச்சியில் 
தவறுகள் சிதறி விழும் :- மனதில் 
காயம் ஏற்படுத்தும் மகிழ்ச்சியில் 
தவறுகள் சிரித்து எழும் :

சந்தர்ப்பங்கள் தவறுகளை 
செய்ய சொல்லும் :
நிர்ப்பந்தங்கள் தவறுக்குள் 
நிற்க செய்யும் :

தவறுகளில் தடுக்கி விழும் மனம்: - வாழ்வை 
தடுமாற்றத்துடனே நடத்த இயலும் தினம் :
மலரை விட மென்மையானது மனம் :- அதை 
மலையை போல் கடினமாக்குவது தவறின் குணம் :

நிலையில்லாதது வாழ்வு - இவ் 
வுலகம் நமக்கு சொல்வது : -இதில் 
நிலைப்பதற்கா தவறினை 
நாம் செய்வது ?

தவறுகள் சொல்லி தரும் வகுப்பினை - கேட்டு 
வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை ...


No comments:

Post a Comment