சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Friday, 12 November 2010

மலர் பரிசு


 


மலர் பரிசு 



கடலோரமாய் ..
கவிதையொன்றை 
எழுதி வைத்து 
சென்று விட்டேன் ../

மறு நாள் ஆகியும் 
மறையாமல் - அங்கு 
'மலரோடு நின்றது' 
மண் மேல் கவிதை ../

கவிதைக்கு அருகே மலர் :

கவிதையை கண்டும் 
காணாமல் பலர் :

காலால் மிதித்து 
நசுக்கியவர்கள் சிலர் :

வாடிய அம்மலர் 
எங்கிருந்து வந்ததோ ?

தேடி தேடி பார்த்தேன் 
மலரின் காலடி தடத்தை .../

மணல் கண்ணாடியில்- மலர்
காலடி  தடம் தெரியவில்லை /

அலையில் ஒதுங்கிய நுரை மலரோ ?- இல்லை கற் 
சிலையில் அணிந்த மாலை மலரோ ?

வந்ததன் ரகசியம் புரியாமல்- ஒரு 
கையிலெடுத்தேன் மலரை ..

மறு கையால் துடைத்தேன்
அழுது புலம்பிய மனதை ../

பரிசு பொருளாய் வந்ததென 
மனதுக்கருகே சொருகி சென்றேன் :

கவிதை போட்டியில் வெற்றி பெறா
கவிதையை மலரால் வென்றேன் :

No comments:

Post a Comment