மலர் பரிசு
கடலோரமாய் ..
கவிதையொன்றை
எழுதி வைத்து
சென்று விட்டேன் ../
மறு நாள் ஆகியும்
மறையாமல் - அங்கு
'மலரோடு நின்றது'
மண் மேல் கவிதை ../
கவிதைக்கு அருகே மலர் :
கவிதையை கண்டும்
காணாமல் பலர் :
காலால் மிதித்து
நசுக்கியவர்கள் சிலர் :
வாடிய அம்மலர்
எங்கிருந்து வந்ததோ ?
தேடி தேடி பார்த்தேன்
மலரின் காலடி தடத்தை .../
மணல் கண்ணாடியில்- மலர்
காலடி தடம் தெரியவில்லை /
அலையில் ஒதுங்கிய நுரை மலரோ ?- இல்லை கற்
சிலையில் அணிந்த மாலை மலரோ ?
வந்ததன் ரகசியம் புரியாமல்- ஒரு
கையிலெடுத்தேன் மலரை ..
மறு கையால் துடைத்தேன்
அழுது புலம்பிய மனதை ../
பரிசு பொருளாய் வந்ததென
மனதுக்கருகே சொருகி சென்றேன் :
கவிதை போட்டியில் வெற்றி பெறா
கவிதையை மலரால் வென்றேன் :

