சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Monday, 12 January 2015

ராஜ பக்சே தோல்வியும்..! நரேந்திர மோடியும்...!





ராஜ பக்சே நடத்தியது
இனவாதம் -நரேந்திர
மோடி  நடத்துவது 
மதவாதம் :

இனவாதம் 
கேட்டது கேள்வி - பதிலோ 
இலங்கையில் 
ராஜ பக்சே தோல்வி:

தூக்கி பிடித்ததால் 
இனவாதம் - அதனால் 
தூக்கில் ஏறியது 
அவன் மானம் :

கொடுமைகள் நிறைந்தது 
அவன் ஆட்சி - அக் 
கொடுங்கோலன் தோல்வியே
அதற்க்கு சாட்சி :

பொது சேவையில் 
பயணித்திருந்தால் 
கிடைத்திருக்கும் 
பெரும் வெற்றி ; 

பொது பல சேனாவுக்கு 
பயந்திருந்ததால் 
ஊரே சிரிக்குது 
உன்னை பற்றி:

சமத்துவத்தை
பேண வேண்டும்  நிர்வாகம் - இங்கோ 
சர்வாதிகாரத்தை
தூண்டியது கருநாகம் - அதனால் 
சமாதியாய் ஆனது 
அந்தோ பரிதாபம்:


மக்களின் கண்ணீரை அதிகம் 
செலவழிக்கும் அரசாங்கம் : அம் 
மக்களாலே ஒருநாள் அசிங்கம் 
பட்டு சிறை வாங்கும்: அதனாலே 
அவர்கள் வடித்த கண்ணீரின் 
கறை  நீங்கும்: அதன் மூலம் 
ஜனநாயகம் மீண்டும் 
தளைத்தோங்கும்...!

இனவாதத்தை 
கை பிடித்தவனுக்கு 
சரித்திரம் கொடுத்த பாடம்:

மதவாதத்தை 
கையிலெடுப்பவனுக்கு 
உணர வேண்டிய நேரம்:


குறிப்பிட்ட இனத்தை மட்டும் 
மகிழ்வித்தவனுக்கு 
நேர்ந்த சவுக்கடி :
குறித்து கொள் மோடியே - உனக்கும் 
ஏற்படும் இத்தகைய நெருக்கடி;

இலங்கை உணர்ந்தது 

இனவாதம் பற்றி...
இந்தியா உணருமா ?
மதவாதம் பற்றி...!