ஒரு பயணம் ..
அவ்வாழ்வை சேரும்
முன்னே கிட்டுமோ ?
மரணம் ../
மனித வாழ்க்கை - இங்கோ
நரக வாழ்க்கை :
வீட்டிலே நாடோடியாய் திரிந்தவன் - இந்த
நாட்டிலே அடிமையாய் எரிகிறான் :
நிம்மதியை தேடுகிறது அவனது இரவுகள் ...
நிம்மதியாய் உறங்குகிறது அவன் உறவுகள் :
கனவுகளின் சொர்க்கம் கல்லறையா? - இங்கே
கடன்பட்ட அடிமைக்கு வெறும் சில்லறையா ?
அழகாய் பிறந்தவன் - இங்கு
அழுக்காய் இருக்கிறான் :
உப்பை பிரித்தவன் - இங்கு
குப்பை பொறுக்குகிறான் :
அடிமையாய் வாழ - தன்னை
அடமானம் வைத்தானோ ?
அயல்நாட்டு மோகத்தில் - தனக்குள்
அவமானம் தைத்தனோ ?
உயிர் பிழைக்க கலை செய்யும்
நம் நாடு - இதுவோ
உயிரோடு கொலை செய்யும்
சுடுகாடு :
பசியென்று இருந்ததில்லை அங்கு..
பசித்திருந்தும் புசித்ததில்லை இங்கு ../'
கண்ணீரை துடைக்க
கன்னங்களுக்கு தெரியாது -
கைகள் துடைக்கும் வரை ...
கடன்பட்ட கண்களுக்கு
கனவுகள் நிறையாது -
கையில் காசு சேரும் வரை ../