சிற்பி

சிற்பி
இவன் செதுக்குவது கல்வெட்டை அல்ல...! கல் மனதை...!

Tuesday, 13 January 2015

அவமானங்கள்


ஆசைகளால் 
அழிகிறது நிதானம் - அவசர 
ஆர்வங்களால் 
எரிகிறது நம்மானம் :

தடுப்புகளை 
உடைத்திடும் தன்மானம் :
தடுக்கி விழுகையில் 
ஏற்படுது அவமானம் :

இருட்டுக்குள் 
அடைந்து கிடக்கும் - அவமானம் 
இருதயத்தை 
குடைந்து எடுக்கும் :

உறுப்பெங்கும் 
இரத்தம் துடிக்கும் - உயிர் 
நரம்பெல்லாம் 
யுத்தம் வெடிக்கும் :

பரபரப்புகளால் 
சுற்றி திரிந்த மனம் :
படபடப்புகளால் 
திக்கி திணறும் தினம் :

பார்வைகள் தோல்வியில் 
தரையை நோக்கும் - கீழ் 
பாதங்கள் கேள்வியால் 
தலையை கேட்கும் :

பழிவாங்கவே - மனம் 
புது வண்ணத்தில் 
படமெடுக்கும் - சிலரை 
குழிபறிக்கவே நம் 
எண்ணத்தில் 
படையெடுக்கும் :

சூழ்ச்சிகளால் வீழ்த்த 
துடிக்கும் சூத்திரம் - அவமானம் 
சூழும் போது மனதில் 
ஏற்படும் ஆத்திரம் :

வருமானங்கள் - நம் 
வாழ்க்கையின் கருவி: 
அவமானங்கள் - நம் 
வாழ்வியலின் பகுதி :

வாழ்க்கையை 
உருக்குவது தன்மானம் :
வரலாறை 
உருவாக்குவது அவமானம் :












Monday, 12 January 2015

ராஜ பக்சே தோல்வியும்..! நரேந்திர மோடியும்...!





ராஜ பக்சே நடத்தியது
இனவாதம் -நரேந்திர
மோடி  நடத்துவது 
மதவாதம் :

இனவாதம் 
கேட்டது கேள்வி - பதிலோ 
இலங்கையில் 
ராஜ பக்சே தோல்வி:

தூக்கி பிடித்ததால் 
இனவாதம் - அதனால் 
தூக்கில் ஏறியது 
அவன் மானம் :

கொடுமைகள் நிறைந்தது 
அவன் ஆட்சி - அக் 
கொடுங்கோலன் தோல்வியே
அதற்க்கு சாட்சி :

பொது சேவையில் 
பயணித்திருந்தால் 
கிடைத்திருக்கும் 
பெரும் வெற்றி ; 

பொது பல சேனாவுக்கு 
பயந்திருந்ததால் 
ஊரே சிரிக்குது 
உன்னை பற்றி:

சமத்துவத்தை
பேண வேண்டும்  நிர்வாகம் - இங்கோ 
சர்வாதிகாரத்தை
தூண்டியது கருநாகம் - அதனால் 
சமாதியாய் ஆனது 
அந்தோ பரிதாபம்:


மக்களின் கண்ணீரை அதிகம் 
செலவழிக்கும் அரசாங்கம் : அம் 
மக்களாலே ஒருநாள் அசிங்கம் 
பட்டு சிறை வாங்கும்: அதனாலே 
அவர்கள் வடித்த கண்ணீரின் 
கறை  நீங்கும்: அதன் மூலம் 
ஜனநாயகம் மீண்டும் 
தளைத்தோங்கும்...!

இனவாதத்தை 
கை பிடித்தவனுக்கு 
சரித்திரம் கொடுத்த பாடம்:

மதவாதத்தை 
கையிலெடுப்பவனுக்கு 
உணர வேண்டிய நேரம்:


குறிப்பிட்ட இனத்தை மட்டும் 
மகிழ்வித்தவனுக்கு 
நேர்ந்த சவுக்கடி :
குறித்து கொள் மோடியே - உனக்கும் 
ஏற்படும் இத்தகைய நெருக்கடி;

இலங்கை உணர்ந்தது 

இனவாதம் பற்றி...
இந்தியா உணருமா ?
மதவாதம் பற்றி...!


















Saturday, 10 January 2015

இன்றைய இரவு...! இன்றைக்கு நிலவு...!


கோடையில் அனல் காற்று - இங்கோ 
வாடையில் மணல் காற்று :

புழுதி படர்ந்தாடும் சாலைகள் :
பூக்களே மலராத இப்பாலைகள் :

பசுமையே இல்லாத பூந்தோட்டம் - இங்கே 
பசியோடு குளிரும் நம்மை வாட்டும் :

வாட்டும் குளிரில் வளருது நம் வறுமைகள் - அது 
காட்டும் வழியினில் வதங்குது நம் திறமைகள் :

தூக்கம் தழுவும் நம் கண்கள் -அதில் 
தூசியை நிரப்புதே இம்மண்கள் :

தாக்கும் புயலில் நம் உடம்பு :-அதை 
தாக்கி அழிக்குது நம் உழைப்பு :

அமைதியில்லாமல் கழிந்தது இன்றைய இரவு :
அதோடு சேர்ந்து கரையுது இன்றைக்கு  நிலவு :


Thursday, 8 January 2015

லுசைல் விளையாட்டு அரங்கம் - LUSAIL MULTIPURPOSE HALL


இந்த 
விளையாட்டு 
அரங்கம் - பலர் 
வியர்வையின் 
சுரங்கம் ...!


கழிவுகளிருந்து     
கலைப்பொருளை 
கண்டெடுத்தது - இவ்வரங்கம் 
தகுதியற்றவரிடமும் 
திறமையை வென்றெடுத்தது :
                                    

குன்றிய குளிரில் 
துடித்ததன் வேதனை :
குறுகிய காலத்தில் 
முடித்தது தான் 
இதன் சாதனை :                                                         
                                                                                   
வெயிலில் 
ரத்தம் வடித்த 
முன் நெற்றி -இதை 
வெளியில் 
பார்க்கையில் தெரிந்தது 
நம் வெற்றி..!

உழைப்பாளர்கள் பலர் 
தம் கை தந்து : 
ஜன 15 ல்  நடக்குது 
உலக கோப்பை  கைப்பந்து :-                                             
                                                                                                         
                                                                                                        

Monday, 10 December 2012

தர்மபுரி கலவரம்

தர்மபுரி கலவரம் 

ஆதி  மனிதன் தன் 
சகோதரனை அழிக்க 
உருவாக்கினான் "சதி"- அதன் 
பரிணாம வளர்ச்சியே நமக்கு 
பரிமாறப்படும் இந்த "சாதி"

"எல்லோரும் ஒரு தாய் மக்கள்"எனும் 
பாலப்பாடம்  பயின்ற "நீயா"?
சகோதர இரக்கத்தை 
எரிக்கும் "தீயா"க...!

"கலப்பு திருமணம்" என்பதன் பொருள்:
"கரைப்பு - இரு இனம்" அல்லவா ?

காதல் என்றால் உயர்சாதி 
பார்க்கும் "மானிடா"?-உங்கள் 
காமத்திற்கு மட்டும் 
கீழ்சாதி "தீனியா"

எந்த சாமி இட்டது கட்டளை-நீயே 
இச்சாதியை காக்கும் தலைவனென்று ....
ஆதி மனித சாதியே அழிந்த பின்பு -இடையில் 
வந்தேறிய எந்த சாதியும் ஒருநாள் அழிவதுண்டு ...!

சாதி வெறி பிடித்தாடும் தமிழர்காள் - உம் 
சாதி பெயர் தோற்றுவித்தவர் யாரோ ?-அதை 
பயிற்றுவித்தவர் தான் யாரோ ?

எத்தனை பாரதியும்,பெரியாரும் 
வந்து  என்ன பயனோ ?
திருந்தா உங்கள் புத்தியை தான் 
என்ன செய்வது ?என்று 
தமிழுக்கும் தெரியவில்லை!
தமிழருக்கும் புரியவில்லை!





Friday, 28 January 2011

நச்சரிப்புகளுக்கு இடையே நலம் விசாரிப்பு


ஒவ்வொரு நாளும் - இங்கு 
சுடுங்கோபத்தின் 
விளைச்சல்கள் :

ஒழுங்காய் கடமை 
செய்தால் கூட 
பரிசு பொருளாய் எரிச்சல்கள் :

நச்சரிப்புகளுக்கு இடையே 
நலம் விசாரிப்பு நடக்கும் :

எரியும் தீப்பொறிக்குள்ளோ 
புன்னகை கருகி கெடக்கும்../

இம்சைகள் கொடுத்து 
இன்பத்தை பெறலாம் எனும் 
கணிப்புகள் நடக்கிறது :

இருதய நெஞ்சுக்குள்ளோ 
அமிலத்தை ஊற்றும் 
திணிப்புகள் நடக்கிறது :

எதற்கெடுத்தாலும் 
சாப வார்த்தைகள் வீசுவது 
சாதிக்க உதவுமோ ?

ஏளன பேச்சுகள் தான் 
வாழ்க்கை ஏட்டை 
எழுத முடியுமோ ?

வெட்டிப்பேச்சுகள்
நிகழ்த்தும் வெற்று புகழ் 
கானல் உலகை 
மட்டுமே காட்டுகிறது :

வெட்டித்தனம் 
ஒதுக்கி வைத்தாலோ  
வெற்றி புகழும்
சற்று மாட்டுகிறது :

ஏளனங்களை 
ஏற்றுக்கொண்டால்
எதிர்ப்புகள் கூட -
நம்மை நெருங்காது :

அவமானத்தை 
உடுத்திக்கொண்டால்
அகிலம் என்றும் 
நமக்கு சுருங்காது :

Thursday, 30 December 2010

பேனா ....



பேனா ....

விரல்களின் காதலன்..
மொழிகளின் காவலன்../

மொழியின் தேடல்கள்..
பேனாவின் உடல்கள்../

பேனாவே..
உன்னை கண்டதன் முகவரி..
மொழி கொண்டது முதல்வரி../


தலைமுறை பல கண்ட 
தலைமகன் - நீ 
தரம் தாழ்ந்திடா 
விலைமகன் :

உனக்கு தான் 
எத்தனை காதலிகள் :
எல்லையும், கணக்கும் 
அற்ற மொழிகள் :

நாகரீகமோ வளர்ச்சி 
பரிமாணம் - உன்னுருவம் 
நாளொருமேனியும் 
கவர்ச்சி உருமாறும்../

மரணம், ஜனனம்
எனுமிரண்டு ...
மாறி மாறி உனக்கு 
வருவதுண்டு ../

உடற்தோலை கழற்றி 
எறிவது பாம்பின் சிறப்பு :
உயிர் நீரை ஊற்றி 
பெறுவது உன் பண்பின் சிறப்பு :

கரங்களுக்குள் அடங்கும் 
ஆயுதம் - நீ
கர்ஜித்தால் ஆட்சியில் 
ஏறும் காகிதம் :

உன் எழுத்துகள் 
ஒருபுறம் நீரோட்டம் ;
புறக்கணித்தால்
உருவாகும் போராட்டம் :

இரத்த தானம் செய்வின்
உயிர் பெறும் உடலெங்கும் - நீ 
இங்க் தானம் செய்வதாலோ 
உயிர் பெறுது உலகெங்கும்../

உன்னை கவனிக்க 
மறந்தவன் அறிவு குருடன் :
கவனித்து மறைத்தவன் 
அசூர திருடன்: 

Monday, 6 December 2010

வாழ்வினில் வெளிப்படுத்துவோம் படிப்பினை




வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை 



அறிவும் மனமும்
இணைத்திருக்கும் கயிறு ...
அறுந்து விடுகையில் 
ஆரம்பமாகிறது தவறு .../

பொய்களை கொண்டு - நம் 
வார்த்தைகளை உடுத்தி கொள்ளும் :
நோய்களை கொண்டு - நம் 
வாழ்க்கையை உறுத்தி கொல்லும்:

அவசரங்கள் ஏற்றும் போதையில் 
தவறுகள் நிறைந்தாடும் ...
அதிக தவறுகள் அடிக்கடி நிகழ்வது 
கவன குறைவாகும் ..../

கோபம் வெளிப்படுத்தும் உணர்ச்சியில் 
தவறுகள் சிதறி விழும் :- மனதில் 
காயம் ஏற்படுத்தும் மகிழ்ச்சியில் 
தவறுகள் சிரித்து எழும் :

சந்தர்ப்பங்கள் தவறுகளை 
செய்ய சொல்லும் :
நிர்ப்பந்தங்கள் தவறுக்குள் 
நிற்க செய்யும் :

தவறுகளில் தடுக்கி விழும் மனம்: - வாழ்வை 
தடுமாற்றத்துடனே நடத்த இயலும் தினம் :
மலரை விட மென்மையானது மனம் :- அதை 
மலையை போல் கடினமாக்குவது தவறின் குணம் :

நிலையில்லாதது வாழ்வு - இவ் 
வுலகம் நமக்கு சொல்வது : -இதில் 
நிலைப்பதற்கா தவறினை 
நாம் செய்வது ?

தவறுகள் சொல்லி தரும் வகுப்பினை - கேட்டு 
வாழ்வினில் வெளிப்படுத்துவோம்  படிப்பினை ...


Friday, 12 November 2010

மலர் பரிசு


 


மலர் பரிசு 



கடலோரமாய் ..
கவிதையொன்றை 
எழுதி வைத்து 
சென்று விட்டேன் ../

மறு நாள் ஆகியும் 
மறையாமல் - அங்கு 
'மலரோடு நின்றது' 
மண் மேல் கவிதை ../

கவிதைக்கு அருகே மலர் :

கவிதையை கண்டும் 
காணாமல் பலர் :

காலால் மிதித்து 
நசுக்கியவர்கள் சிலர் :

வாடிய அம்மலர் 
எங்கிருந்து வந்ததோ ?

தேடி தேடி பார்த்தேன் 
மலரின் காலடி தடத்தை .../

மணல் கண்ணாடியில்- மலர்
காலடி  தடம் தெரியவில்லை /

அலையில் ஒதுங்கிய நுரை மலரோ ?- இல்லை கற் 
சிலையில் அணிந்த மாலை மலரோ ?

வந்ததன் ரகசியம் புரியாமல்- ஒரு 
கையிலெடுத்தேன் மலரை ..

மறு கையால் துடைத்தேன்
அழுது புலம்பிய மனதை ../

பரிசு பொருளாய் வந்ததென 
மனதுக்கருகே சொருகி சென்றேன் :

கவிதை போட்டியில் வெற்றி பெறா
கவிதையை மலரால் வென்றேன் :

Monday, 8 November 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்




அழிவின் அடையாளங்கள் 


எண்ணற்ற உயிரினத்தை 
தத்தெடுத்த இவ்வுலகம்.. 
என்றோ ஓர் நாள் 
உயிரற்று போய்அழியும் ../  


அழிவின் அடையாளங்களை 
அழகாய் எடுத்து கூறவே- இது  
ஆன்மிகம் கூறும் அறிவியல்   
ஏற்று கொள் அறிவே..../ 


பெற்றெடுத்து வளர்த்த மகன் - தன்னை
பேணாத அடிமை நிலை  
ஒரு தாய் அடைவாள் : 
முத்தம் ஈந்து மகிழ்ந்த மகள் - தனக்கு  
முதலாளியாய் மாறும்
நிலைகண்டு உள்ளம் உடைவாள் : 


கண்காட்சி பொருளாய் - பெண் 
காண்போரை கவரவே சிரிப்பாள்:
 உடையணிந்தும் கூட - தன்னின்  
உடழகை நிர்வாணமாய் விரிப்பாள்:


போதையூட்டும் அறிவில்
மாறி போகும் 
மனிதனின் வாழ்க்கை முறை :- அந்நிய 
 பேதை மீது பித்தம் கொண்டு 
அவர்கள் வாழ்வில் படியும் 
அழுக்கு கறை.. / 

தகுதியற்றவர் தலைமை
பொறுப்பில் அலைவர் :
தன்னலம் பேணியே 
பொதுநலம் அமைப்பர் :
 நாணயம் இல்லா 
காட்சியமைப்பு நடக்கும் -அந்நாளில் 
 நாணயத்திற்க்காகவே 
ஆட்சியமைப்பு இருக்கும் ../

கொடுக்கும் தர்மத்தை 
பொறுக்கும் நிலை அன்றிருக்காது :
செல்வங்கள் சேர்த்திருந்தும்-அவர்கள் 
செயல்களோ  வென்று இருக்காது :

ஆண்டுகள் சுருட்டப்பட்டு 
வாரங்களாக சுழற்றப்படும் :
மாதங்கள் உரிக்கப்பட்டு 
மணித்துளிகளாக விரிக்கப்படும் :
காலங்கள் கல்லறை நிமிடங்களை 
எதிர்நோக்கியே பயணிக்கும் :
கண்களின் கனவுகள் 
கண்ணீரில் மூழ்கியே மரணிக்கும் :

பூகம்பங்கள் மூன்று - இப்
பூமியை குலுக்கும் :
மேற்கு,கிழக்கு,மத்தியென-அரேபிய 
தேசத்தையே உலுக்கும் : 
உயர்ந்த கட்டிடங்கள் 
உருக்குலைந்து இடிந்து போகும் :
 உயிரினங்கள்
உயிரற்று அழிந்து போகும் :

சரித்திரம் அந்நாளில்  -தன்
நிஜத்தினை இழக்கும் :
விசித்திர விலங்கொன்று 
பேசிக்கொண்டும் இருக்கும் :

அதிசயங்கள் படைப்பினத்தை 
நிலைப்படுத்தும் -நிகழும் 
அற்புதங்கள் படைத்தவனை
நினைவுப்படுத்தும் :

எண்ணிலடங்கா குள்ளர்கள் 
கூட்டமிரண்டு  - இம் 
 மண்ணகத்தை மூடும்
படையெடுத்து நின்று ../  
நொடியில் பெருகும் 
அதன் இனப்பெருக்கத்தால் 
 மக்கள் மரண பயம் 
அடைவர்  மனநடுக்கத்தால்.../

ஆக்சிஜன் விகிதம் 
அடங்கி  போகும் அந்நேரம் ..
ஆக்டோபஸ் புகையால்
நின்று போகும் உயிர் சுவாசம் ..../ 


தன்னை இறைவன் என்பான் ..
தஜ்ஜால் என்னும் ஒருவன்../
ஒரு கண் அவனுக்கு ஊனமாகும் :-அவனால்
ஒருமுறை மரணம் கூட குணமாகும் :
 பிரமிப்புகள் அதிகம் நிகழ்த்தி
தன்னை பிரபலப்படுத்துவான் :- அவன் தன்
பேராற்றலால் இறைவனாக 
தன்னை பிரகனப்படுத்துவான் :

பூமி ஓர் நாள் 
தன் சுழற்சியை மாற்றும் :
பூகம்ப நிகழ்வினை 
தன் உடம்பினில் ஏற்றும் :
கிழக்கு சூரியனை 
மேற்கில் காட்டும் - இறை  
 மன்னிப்பென்னும் வாசல் 
அன்று தான் பூட்டும் : 

 மாபெரும் நெருப்பொன்று
திரண்டு வரும் ..
மக்களை ஓரிடத்திலே 
கொண்டு வரும் ../
ஏமன் நாட்டில் கூட்டப்படும் 
அந்த மக்கள் திரள் :- அந்நாளில்   
 ஏற்காது அவனுக்கும் 
கேட்காது மன்னிப்பின் குரல் :